எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Sa.TamilSelvan Books in Tamil at Low Price - www.thamizhbooks.com

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் – தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் 1954ல் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்… என மாறி மாறி பணியாற்றியவர்.

அதன் பின்னர் 90களில் பொதுமக்களிடையே படிப்பறிவை, எழுத்தறிவை, கற்றலின் முக்கியத்துவத்தை பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலக பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர்.

1978ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநில செயலாளராக, தலைவராக பணியாற்றி தற்போது மதிப்புறு தலைவராக செயலாற்றி வருகிறார். தற்போது தனது இணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாய் அவர்களுடன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் சித்தார்த் சென்னையில் தனது இணையர், மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார்.

ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் “பாலகான சபா” என்ற நாடககுழு அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசை ஆளுமைகளுக்கே இசை கற்பித்த ஆசான். எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள்.

ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முக்கியமான படைப்புகள் வெயிலோடு போய் -1984-சிறுகதைகள், வாளின் தனிமை-1992- சிறுகதைகள், மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006, இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள், ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள், அரசியல் எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை, நான் பேச விரும்புகிறேன் – சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள், வீரசுதந்திரம் வேண்டி – (ஜா.மாதவராஜுடன் இணைந்து), பெண்மை என்றொரு கற்பிதம், பேசாத பேச்செல்லாம், இருவர் கண்ட ஒரே கனவு, சந்தித்தேன், வலையில் விழுந்த வார்த்தைகள், அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள், ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள், எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம் என சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரை தொகுப்புகள், இடதுசாரி முற்போக்கு அரசியல் ரீதியிலான பல நூல்களை எழுதியுள்ளார்.

வெளியான சிறு நூல்கள்
1. 1947

2. 1806

3. நமக்கான குடும்பம்

4. வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்

5. அலைகொண்ட போது.. – சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்

6. தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்

7. பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை

8. எது கலாச்சாரம்?

9. அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல் என தமிழ் வாசக உலகிற்கு அதி முக்கியமான படைப்புக்களை கொடுத்துள்ளார்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Sa.TamilSelvan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com

  • -10%

    ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    1

    ஆர். பாலகிருஷ்ணன் இவற்றையெல்லாம் ஏன் பேசுகிறார்? ஏன் இப்போது பேசுகிறார்? நாம் வாழும் காலத்தின் அசைவியக்கங்களுக்கான எதிர்வினையே இந்தப் பேச்சுகளும் எழுத்துகளும், இன்றைய வாழ்வை தன் கவிதையின் மூலம் கதைகளின் மூலம் ஓவியத்தின் மூலம் எதிர்கொள்ளும் ஒரு கலைஞனைப்போல. ஒரு படைப்பாளியாக சங்க இலக்கியம். திருக்குறள் என்கிற இரு அடித்தளங்களில் அழுத்தமாகக் காலூன்றி நின்று கருத்தியல் தளத்தில் போராடும் ஒரு பண்பாட்டு அரசியலை மிக நுட்பமாக முன்னெடுக்கிறார். கொந்தளித்து எழ வேண்டிய ஒரு காலச்சூழலில் மந்த நிலையில் அமிழ்ந்திருக்கும் குடிமைச் சமூகத்தின் முகத்தில் நீர் அடித்து எழுப்பும் முயற்சிகள் இவை.

    Original price was: ₹380.00.Current price is: ₹342.00.
    Add to cart
  • Pathimoonil onnu

    பதிமூணில் ஒண்ணு

    0

    மனிதர்கள் கை கொடுக்காதபோது தெய்வத்தின் துணையை நாடும் நம்ம ஊர் வழக்கப்படி நடராஜன் பிள்ளையார் கோவில் வாசலில் கிடந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருந்தான்.

    20.00
    Add to cart
  • -10% Idaiyiladum Unjal copy

    இடையிலாடும் ஊஞ்சல்

    1

    இந்து தமிழ் திசை மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு இது. சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளின் மீது கட்டப்பட்ட ஊஞ்சல் காலங்களுக்கு இடையிலும் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலுமென ஆடுகின்றது. சமூக அக்கறை மிக்க, அதே சமயம் சுவையான விவாதத்தைக் கிளப்பும் கட்டுரைகள் இவை.

    Original price was: ₹150.00.Current price is: ₹135.00.
    Add to cart
  • -10% Thamizh Sirukathaiyin Thadankal

    தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

    0
    Original price was: ₹895.00.Current price is: ₹805.00.
    Add to cart
  • -10% Ketathal Solla Nernthathu

    கேட்டதால் சொல்ல நேர்ந்தது

    0

    நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது.
    என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளியிலிருந்து யாரும் கேட்டுவிட முடியாது என்பதும் புலப்படுகிறது கேள்வி கேட்பவர்.

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
    Add to cart
  • -10% Deivame Satchi

    தெய்வமே சாட்சி

    0

    இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார்.

    Original price was: ₹160.00.Current price is: ₹144.00.
    Add to cart
  • -10% tamilselvan's These articles have left their mark on fiction. He writes personal life experiences with an open mind and in a kind of flexible tone.

    பேசாத பேச்செல்லாம்

    0

    (pesatha pechellam )தோழர் ச தமிழ்ச்செல்வன் tamilselvan அ புனைவு எழுத்துகளில் இக்கட்டுரைகள் தனித்த முத்திரை பதித்தவை. தனிப்பட்ட வாழ்வனுபவங்களை திறந்த மனதோடும் ஒருவித நெகிழ்ச்சியான தொனியிலும் எழுதியிருக்கிறார்.

    Original price was: ₹170.00.Current price is: ₹153.00.
    Add to cart
  • (Thamizhaka valarchiyil communistkal ) In the 1940s, the Communist Movement mobilized the Dalit peasantry in Tanjore fought for their rights.
  • (Kadunkappi)Uncle! I don’t even want that dinner. Do not plant jewelry. Uncle told me very firmly that this tough guy and this girl were walking fast.
  • -10% Seevan

    சீவன்

    0

    அற்புதமான யதார்த்தவாத படைப்பாளி.சிந்தனை அறிஞர்.முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளைத் தொகுத்துள்ளார் தமிழ்ச்செல்வன்.அதிலும் ரொம்பநாள் கழித்து அந்த பூவுக்கு கீழே கதையை ‘என்ன அடுத்த விருந்தாளி வந்தாச்சா’ என்பதுவரை படித்து மனம் துள்ளியது.இதைத் தவிர ஒவ்வொரு கதையுமே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை.மைதானத்து மரங்கள்,சாசனம் ஆகியவை கந்தர்வன் நக்கலுக்கே பெயர்பெற்றவை.பலரும் கந்தர்வனைப்பற்றி அறிய நல்ல அறிமுக நூல் இது

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • 1806 வேலூர் புரட்சி

    0

    காரிருள் சூழ்ந்த கரிய வனத்தில் ஓர் ஒளிமின்னலாக 1806இல் எட்டு மணிநேரம் தோன்றி மறைந்த இக்கிணர்ச்சி நாடெங்கும் இந்திய சிப்பாய்களின் மனதில் வரும் வரும் காலமெல்லாம் தொடர்ந்து மின்னிக்கொண்டே இருந்தது.

    15.00
    Add to cart
  • -10%

    றெக்கைகள் விரியும் காலம்

    0

    காதல் கட்டற்ற மாபெரும் சக்தி. சட்டத்தாலும் சடங்குகள் அறநெறிகளாலும் அதை அடக்கிவிட முடியாது.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • இந்திய சுதந்திர வரலாறு ஒரு பார்வை

    0

    India Sudhandhira Varalaru Oru Parvai

    இன்று வாழும் சிறுவர்கள் சுதந்திரத்திற்குப் பின் பிறந்த நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நம் நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்றை, அந்த வரலாற்றின் முக்கிய நாயகர்களை அறிமுகப்படுத்துவதே இந்நூல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கிய ஜான்சி ராணியிலிருந்து துவங்கி மகாத்மா காந்தி, பகத்சிங், ஆசாத், எல்லை காந்தி என ஏராளமானவர்களின் பங்கை, இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றை சித்திர வடிவில் முன்வைக்கிறது இந்நூல்.

    80.00
    Add to cart
  • -10%

    இருளும் ஒளியும்

    0

    இத்தனாந்தேதியோடு அறிவொளி இயக்கம் முடிஞ்சு போச்சு. போயிட்டு வாரோம் என்று நாங்கள் மக்களிடம் விடைபெற்றுப் பிரியவில்லை.
    போனவாரம் கூட தென்காசிக்குப் போய்விட்டு பஸ்ஸில் திரும்பும்போது கொய்யாப்பழம் விற்ற பெண்மணி என்னிடம் ரெண்டு பழத்தை நீட்டியபோது நான் வேண்டாம் என்று மறுத்தேன். காசெல்லாம் வேண்டாம் சார். சும்மா சாப்பிடுங்க. நீங்க அறிவொளி சார்தானே? எங்க ஊருக்கு சசிகலா மேடம் கூட வந்து கதையெல்லாம் சொன்னீங்கள்ள? நானும் அறிவொளிதான்.

    Original price was: ₹170.00.Current price is: ₹153.00.
    Add to cart
  • -50% கெத்து - இலட்சுமணப் பெருமாள் கதைகள்-0

    கெத்து

    0

    கரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்து வருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும், அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும் தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் போட்ட பாதையில் அதிகம் பேச்சு மொழியைக் கைக் கொண்டு கதை சொல்பவர். வில்லிசைக் கலைஞராகவும் இன்னொரு பரிமாணம் கொண்டுள்ள இவரது நடையில் கதைகள் “ஜல் ஜல்” என்று பயணிக்கும் வேகம் கொண்டவை.

    Original price was: ₹80.00.Current price is: ₹40.00.
    Add to cart
  • -10% எசப்பாட்டு - ஆண்களோடு பேசுவோம்-0

    எசப்பாட்டு

    0

    தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் – இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின. “ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கியிருக்கிறோம்.

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
    Add to cart
  • -10% அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்-0

    அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்

    0

    இவரது சமீப காலத்திய குறிப்புகள், கட்டுரைகளின் தொகுப்பு இது. நாம் வாழும் இன்றைய காலத்தின் நிழலும் வெயிலும் படிந்த இக்கட்டுரைகள் சமகால வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றமாக நம் முன் விரிகின்றன. ”என்னமாதிரியான ஒரு உலகத்தை நாம் விட்டுச் செல்கிறோம் நம் குழந்தைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் என்கிற அச்சமும் குற்ற மனமும் வயதாக வயதாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அட வாங்க தம்பி ஒரு டீ சாப்பிட்டுப் போகலாம் என்கிற மாதிரி எளிதாகவும் சிக்கலும் சந்தேகமுமற்ற அன்பு ததும்புவதாகவும் இருந்த நம் வாழ்க்கையை நம் கைகளிலிருந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எப்படி மௌனப் பார்வையாளர்களாக நாட்களைக் கடத்த முடியும்?”

    Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
    Add to cart
  • -11% கடைசி இலை -0

    கடைசி இலை

    0

    இக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் என பல கதைகள் இங்கு காத்திருக்கின்றன.

    Original price was: ₹65.00.Current price is: ₹58.00.
    Add to cart
  • -11% ஆறடி நிலம் -0

    ஆறடி நிலம்

    0

    இக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் என பல கதைகள் இங்கு காத்திருக்கின்றன.

    Original price was: ₹65.00.Current price is: ₹58.00.
    Add to cart
  • -10% பக்கத்தில் வந்த அப்பா-0

    பக்கத்தில் வந்த அப்பா

    0

    மனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆண்டுதோறும் புதிய புதிய கதைகளைத் தொகுத்து மாணவ-மாணவியர்க்கு வழங்கி வருகிறது எஸ்.ஆர்.வி. பள்ளி. வகுப்பறையிலேயே கதை நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்கிற தன்னுணர்வைக் கதைகள் தருகின்றன. படித்து முடித்தபின் இப்படியான ஓர் உலகத்தில்தான் நாம் வாழப்போகிறோம் என்பதை இக்கதைகள் அறிமுகம் செய்கின்றன. இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் அறிந்து கொள்ளவும் அவற்றின் இயக்கங்களையும் பயணங்களையும் உட்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் எண்ணற்ற கருவிகளையும் எந்திரங்களையும் சூத்திரங்களையும் விதிகளையும் அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. மூளை உள்ளிட்ட மனித உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் கூட ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளன. குணப்படுத்த பல்லாயிரம் மருந்துகள் மாத்திரைகள் உள்ளன.ஆனால்,மனித மனதில் நிகழும் அசைவுகள்,துளிர்க்கும் அன்பு, பற்றி எரியும் வெறுப்பு, மூளும் பகையுணர்ச்சி, துரோகத்தின் கருநிழல், தியாகத்தின் பசுமை என மனங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றின் வழி மானுட உறவுகளைப் புரிந்துகொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே விஞ்ஞானம், ஒரே கருவி- கலை, இலக்கியம் மட்டுமே. அதிலும் குறிப்பாக எல்லா வடிவங்களுக்கூடாகவும் சாரமாக இருப்பது கதை. கதை மட்டுமே.

    Original price was: ₹150.00.Current price is: ₹135.00.
    Add to cart
  • -10% ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் -0

    ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்

    0

    ராமனை முன் வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் வெட்டியாகத் தின்று கொண்டு திரிகிறவனுக்கும் நம் மக்கள் “சரியான சாப்பாட்டு ராமன் அவன்” என்று ராமனின் பேரைத்தான் சூட்டியிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்ல வேண்டுமல்லவா?. கல்யாணராமன், ஜானகிராமன், சீத்தாராமன், அயோத்திராமன், பூட்டிய வில்லோடு திரிகிற ஆர்..எஸ்.எஸ்.ராமன் அலைகிற இப்பூமியில் நம்ம பங்குக்கு இந்தச் சாப்பாட்டு ராமனையும் இறக்கி விடுவோமே என்கிற நல்லெண்ணத்தினால் இப்புத்தகம் வருகிறது. தவிரவும், சமைக்காமல் சும்மா சாப்பிட மட்டும் செய்கிற ஆண்களாகிய நம்மை “சாப்பாட்டு ராமன்” என்று சொல்வதில் தர்க்க ரீதியாக யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஒரே ஒரு சாப்ப்ட்டு ராமனின் குறிப்புகள் இவை. ஒவ்வொரு ஆணும் இதுபோல ஒரு புத்தகம் எழுதலாம்தான். நாடு சாப்ப்ட்டு ராமங்களால் நிரம்பி வழிகிறது.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% பெண்மை என்றொரு கற்பிதம்-0

    பெண்மை என்றொரு கற்பிதம்

    0

    பெண்மை என்றால் என்ன?ஆண்மை என்றால் என்ன?ஆண்மை-பெண்மை என்பதெல்லாம் இயற்கையில் வந்தவையா?நாகரிக சமூகமாக மனிதன் வாழத்தொடங்கிய பின் கட்டமைக்கப்பட்டவையா?பெண்மையின் லட்சனங்களாக நம் பொதுப்புத்தியில் உறைந்து கிடப்பவற்றில் எவையெல்லாம் உயிரியல் ரீதியானவை.எவையெல்லாம் பண்பாடுத் தொழிற்சாலைகளால் நம் மனங்களில் அழுத்தி உன்றப்பட்டவை?

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • Placeholder

    தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

    0

    1940களில் தஞ்சைத்தரணியில் விவசாயக்கூலிகாளன் தலித் மக்களலை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காக போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும் சாட்டையடி,சாணிப்பாலுக்குஎதிராகவும் போராடிய அதே நேரத்தில் தெருவில் செருப்புப்போட்டு நடக்கும் உரிமைக்காகவும் தோளில் துண்டு போடும் உரிமைக்காகவும் தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் முழுங்காலுக்கு மேலே சேலையைத்தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற வன்முறையை எதிர்த்துக் கெண்டைக்காலுக்கு சேலையை இறக்கிக்கட்ட அனுமதி கோருகிற முறையாலும் பல்வேறு பண்பாட்டு போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது வரலாறு.

    15.00
    Add to cart
  • -10% தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்-0

    ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

    0

    தமிழின் முக்கியமான சிறுகதையாளர்.பண்பாட்டுப் போராளி.மிகச் சிறந்த கட்டுரையாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.தற்போது அவ்வமைப்பின் மாநிலத் தலைவர்.அறிவொளி இயக்கத்தில் நீண்ட காலம் பங்களிப்பைச் செலுத்தியவர் மாற்றுக் கல்விக்கான பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ச்சியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதிலும்,பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதிலும்,எழுதுவதிலும் இடம் வகிப்பவர் தமிழ்ச்செல்வன் படைப்புகளின் பலம் என்று அவருடைய மொழி நடையையும் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் பாங்கையும் குறிப்பிடலாம்.நுட்பமும் அழகும் எளிமையும் கூட்டிய மொழி லாவகம் கைவரப் பெற்றவர்.இடையிடையே தெறிக்கும் அங்கதம் இடைச் செருகலாக இல்லாமல் தேவையானதெனத் தீர்மானித்தே அதை வாசகன் அனுபவித்துக் கடந்து செல்லமுடியும்.இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் வறுமை உருவாக்கும் கோரச் சித்திரத்தை சிறிதளவும் மிகையற்ற வகையில் வரைந்து வாசிப்பவரின் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைக்கிறார்.தூய அன்பின் மகத்துவம் உதாசீனப் படுத்தப்படுகையில் எழும்பும் சோகலயங்களை இசைக்கலைஞனைப் போல இவர்தன் கதைகளில் இசைக்கும் பாங்கு அலாதியானது.பெண்களின் அக உலகத்தை நுட்பமாக அவதானித்தவராக தமிழ்ச்செல்வன் பலகதைகளில் வெளிப்படுகிறார்.ஆண்,பெண் உறவின் சிக்கல்களை இத்தனை நெருக்கமாக அலசிப் பார்த்தவர்கள் தமிழில் குறைவு,குழந்தைகளின் மெல்லிய மனவோட்டங்களும்,ஆசைகளும் ஏமாற்றங்களும் தமிழ்ச்செல்வனின் எழுத்தின் வழியே துல்லியமான சித்தரிப்பைப் பெறுகிறது.எதை எழுதினாலும் அதுவாக மாறிவிடும் தன்மை நல்ல கலையின் கலைஞனின் அடையாளம்.அந்த பரிபூரணத்தை நாம் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளிலும் பெறமுடியும்.

    Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
    Add to cart
  • -10% தங்கள் பதிலை எதிர்பார்த்து...-0

    தங்கள் பதிலை எதிர்பார்த்து…

    0

    குழந்தைகள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் பெரியவர்களாகிய நம்மிடம் உண்மையில் பதில் இல்லைதான். நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்தின் போதாமைகள், ஏற்றத்தாழ்வுகள், பலவீனங்கள் குறித்த குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கிறது.

    Original price was: ₹130.00.Current price is: ₹117.00.
    Add to cart
  • -10% காலத்தின் குரல்-0

    காலத்தின் குரல்

    0

    எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்கும்.சகிப்புத்தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும கடுமையான அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இந்த வரலாற்றுக்குப் புதிய அர்த்தமும் தேவையும் இயல்பாக எழுகிறது.படைப்பாளிகளின் அறிவுலகின் வரலாற்றுக் கடமையை நினைவூட்டிப் படைப்பு மனதின் எழுச்சிக்கு விசை தரவும்.கூட்டாக நின்று சமகாலச் சவால்களைச் சந்திக்கவும் இந்த வரலாற்று வாசிப்பு அவசியமாகும்

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
    Add to cart
  • -10% ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-0

    ஜிந்தாபாத் ஜிந்தாபாத்

    0

    சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்.

    Original price was: ₹180.00.Current price is: ₹162.00.
    Add to cart
  • arasiyal enakku

    அரசியல் எனக்குப் பிடிக்கும்

    0

    இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது.

    35.00
    Add to cart