எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Sa.TamilSelvan Books in Tamil at Low Price - www.thamizhbooks.com

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் – தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் 1954ல் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்… என மாறி மாறி பணியாற்றியவர்.

அதன் பின்னர் 90களில் பொதுமக்களிடையே படிப்பறிவை, எழுத்தறிவை, கற்றலின் முக்கியத்துவத்தை பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலக பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர்.

1978ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநில செயலாளராக, தலைவராக பணியாற்றி தற்போது மதிப்புறு தலைவராக செயலாற்றி வருகிறார். தற்போது தனது இணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாய் அவர்களுடன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் சித்தார்த் சென்னையில் தனது இணையர், மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார்.

ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் “பாலகான சபா” என்ற நாடககுழு அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசை ஆளுமைகளுக்கே இசை கற்பித்த ஆசான். எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள்.

ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முக்கியமான படைப்புகள் வெயிலோடு போய் -1984-சிறுகதைகள், வாளின் தனிமை-1992- சிறுகதைகள், மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006, இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள், ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள், அரசியல் எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை, நான் பேச விரும்புகிறேன் – சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள், வீரசுதந்திரம் வேண்டி – (ஜா.மாதவராஜுடன் இணைந்து), பெண்மை என்றொரு கற்பிதம், பேசாத பேச்செல்லாம், இருவர் கண்ட ஒரே கனவு, சந்தித்தேன், வலையில் விழுந்த வார்த்தைகள், அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள், ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள், எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம் என சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரை தொகுப்புகள், இடதுசாரி முற்போக்கு அரசியல் ரீதியிலான பல நூல்களை எழுதியுள்ளார்.

வெளியான சிறு நூல்கள்
1. 1947

2. 1806

3. நமக்கான குடும்பம்

4. வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்

5. அலைகொண்ட போது.. – சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்

6. தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்

7. பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை

8. எது கலாச்சாரம்?

9. அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல் என தமிழ் வாசக உலகிற்கு அதி முக்கியமான படைப்புக்களை கொடுத்துள்ளார்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Sa.TamilSelvan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com

  • Placeholder

    தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – Bulk (50 Copies)

    1

    தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – Thamizh Sirukathaiyin Thadangal

    நூற்றாண்டு கண்ட தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் முதல் ஐம்பதாண்டுகளைப்பற்றி இந்நூல் பேசுகிறது. இளம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் தமிழ்ச்சிறுகதைக்கு வண்ணமும் வாசமும் சேர்த்த 60 க்கு மேற்பட்ட படைப்பாளிகளை இந்நூல் அறிமுகம் செய்கிறது. இக்கட்டுரைகளினூடாக தமிழ்ச்சிறுகதைகள் காலம்தோறும் பேசிய அரசியலை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இயல்பாகவே இக்கட்டுரைகள் நம் சிறுகதைப் படைப்பாளிகள் மீதான மதிப்பையும் வியப்பையும் இன்னும் உயரத்திற்குக் கொண்டுசெல்கின்றன. இளம் வாசகர்கள், படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடது பக்கமிருந்து இப்படி ஒரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    12,500.00
    Add to cart
  • Thiruppiyaditha Varalaru

    முன்பதிவு: திருப்பியடித்த வரலாறு

    1

    Thiruppiyaditha Varalaru – திருப்பியடித்த வரலாறு

    500.00
    Add to cart
  • -10% ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    1

    Oru Panpattu Arasiyal Payanam – ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    ஆர். பாலகிருஷ்ணன் இவற்றையெல்லாம் ஏன் பேசுகிறார்? ஏன் இப்போது பேசுகிறார்? நாம் வாழும் காலத்தின் அசைவியக்கங்களுக்கான எதிர்வினையே இந்தப் பேச்சுகளும் எழுத்துகளும், இன்றைய வாழ்வை தன் கவிதையின் மூலம் கதைகளின் மூலம் ஓவியத்தின் மூலம் எதிர்கொள்ளும் ஒரு கலைஞனைப்போல. ஒரு படைப்பாளியாக சங்க இலக்கியம். திருக்குறள் என்கிற இரு அடித்தளங்களில் அழுத்தமாகக் காலூன்றி நின்று கருத்தியல் தளத்தில் போராடும் ஒரு பண்பாட்டு அரசியலை மிக நுட்பமாக முன்னெடுக்கிறார். கொந்தளித்து எழ வேண்டிய ஒரு காலச்சூழலில் மந்த நிலையில் அமிழ்ந்திருக்கும் குடிமைச் சமூகத்தின் முகத்தில் நீர் அடித்து எழுப்பும் முயற்சிகள் இவை.

    Original price was: ₹380.00.Current price is: ₹342.00.
    Add to cart
  • Pathimoonil onnu

    பதிமூணில் ஒண்ணு

    0

    மனிதர்கள் கை கொடுக்காதபோது தெய்வத்தின் துணையை நாடும் நம்ம ஊர் வழக்கப்படி நடராஜன் பிள்ளையார் கோவில் வாசலில் கிடந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருந்தான்.

    20.00
    Add to cart
  • -10% Idaiyiladum Unjal copy

    இடையிலாடும் ஊஞ்சல்

    1

    இந்து தமிழ் திசை மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு இது. சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளின் மீது கட்டப்பட்ட ஊஞ்சல் காலங்களுக்கு இடையிலும் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலுமென ஆடுகின்றது. சமூக அக்கறை மிக்க, அதே சமயம் சுவையான விவாதத்தைக் கிளப்பும் கட்டுரைகள் இவை.

    Original price was: ₹150.00.Current price is: ₹135.00.
    Add to cart
  • -25% Thamizh Sirukathaiyin Thadankal

    தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

    0
    Original price was: ₹895.00.Current price is: ₹670.00.
    Add to cart
  • -10% Ketathal Solla Nernthathu

    கேட்டதால் சொல்ல நேர்ந்தது

    0

    நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது.
    என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளியிலிருந்து யாரும் கேட்டுவிட முடியாது என்பதும் புலப்படுகிறது கேள்வி கேட்பவர்.

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
    Add to cart
  • -10% Deivame Satchi

    தெய்வமே சாட்சி

    0

    இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார்.

    Original price was: ₹160.00.Current price is: ₹144.00.
    Add to cart
  • -10% tamilselvan's These articles have left their mark on fiction. He writes personal life experiences with an open mind and in a kind of flexible tone.

    பேசாத பேச்செல்லாம்

    0

    (pesatha pechellam )தோழர் ச தமிழ்ச்செல்வன் tamilselvan அ புனைவு எழுத்துகளில் இக்கட்டுரைகள் தனித்த முத்திரை பதித்தவை. தனிப்பட்ட வாழ்வனுபவங்களை திறந்த மனதோடும் ஒருவித நெகிழ்ச்சியான தொனியிலும் எழுதியிருக்கிறார்.

    Original price was: ₹170.00.Current price is: ₹153.00.
    Add to cart
  • (Thamizhaka valarchiyil communistkal ) In the 1940s, the Communist Movement mobilized the Dalit peasantry in Tanjore fought for their rights.
  • (Kadunkappi)Uncle! I don’t even want that dinner. Do not plant jewelry. Uncle told me very firmly that this tough guy and this girl were walking fast.
  • -10% Seevan

    சீவன்

    0

    அற்புதமான யதார்த்தவாத படைப்பாளி.சிந்தனை அறிஞர்.முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளைத் தொகுத்துள்ளார் தமிழ்ச்செல்வன்.அதிலும் ரொம்பநாள் கழித்து அந்த பூவுக்கு கீழே கதையை ‘என்ன அடுத்த விருந்தாளி வந்தாச்சா’ என்பதுவரை படித்து மனம் துள்ளியது.இதைத் தவிர ஒவ்வொரு கதையுமே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை.மைதானத்து மரங்கள்,சாசனம் ஆகியவை கந்தர்வன் நக்கலுக்கே பெயர்பெற்றவை.பலரும் கந்தர்வனைப்பற்றி அறிய நல்ல அறிமுக நூல் இது

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart