
எழுத்தாளர் வீ.பா.கணேசன் (V.Ba.Ganesan) தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். இடதுசாரி முற்போக்கு புத்தகங்களை வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துள்ளார். இதில் சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
இந்து மதமும் இந்துத்துவாவும், சாவி, தங்கக் கோட்டை, வங்கப்புலி மர்மம், நெப்போலியனின் கடிதம், பிள்ளையாருக்குப் பின்னே மர்மம், காத்மாண்டு கொள்ளையர்கள், இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம், டார்ஜீலிங்கில் ஓர் அபாயம், மர்மமான ஒரு குடித்தனக்காரர், மகாராஜாவின் மோதிரம் ஆகிய இவரது புத்தகங்கள் அனைத்தும் தமிழத்தில் மிக பிரபலமான படைப்புகள் ஆகும்.
இடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார். வங்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய அரிதான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். வடகிழக்கு சார்ந்த இவருடைய கள அறிவு அபாரமானது. இடதுசாரி சித்தாந்தம், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு விதங்களில் வங்கத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் வீ.பா.கணேசன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer V.Ba.Ganesan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com

மனித உயிர்களா? சொத்துடைமையா?
0₹250.00Manitha Uyirgala Sothudaimaiya – மனித உயிர்களா? சொத்துடைமையா?
இந்த நூலில் இடம்பெற்றுள்ள பி.ராமமூர்த்தியின் நாடாளுமன்ற-சட்டமன்ற உரைகளைப் படிக்கும்போது, அவருடைய ஆழமான அறிவையும், தொலைநோக்கு சிந்தனையையும் ஒவ்வொரு உரையும் தயாரிப்பதற்கு அவர் செலுத்தியுள்ள மகத்தான உழைப்பையும் காண முடிகிறது.- -11%

இந்தியா @ 75
0Original price was: ₹190.00.₹170.00Current price is: ₹170.00.இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் அளித்த கருணை மனுக்கள் பற்றியும், அவற்றின் விளைவாக அந்தமான் செல்லுலர் சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும் நாம் விவாதித்திருக்கிறோம்.

இந்து மதமும் இந்துத்துவாவும்
0₹25.00’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது
- -50%

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம்
0Original price was: ₹420.00.₹210.00Current price is: ₹210.00.ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அதில் 407 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்த ஒட்டு மொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர்.
- -19%

சத்யஜித் ரே
0Original price was: ₹160.00.₹130.00Current price is: ₹130.00.இந்திய சினிமாவின் வரலாறு சத்யஜித் ரேயிலிருந்தே துவங்குகிறது
- -10%

கல்கா மெயிலில் நடத்த சம்பவம்
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.“ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு!”

பூட்டிய பணப்பெட்டி
0₹60.00வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா.
- -10%

பம்பாய் கொள்ளையர்கள்
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.‘ஜடாயு’வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை.அப்பாவி’ஜடாயு’விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள்.கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெற போராடினார்.கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா?என்பதைச் சொல்கிறது பம்பாய் கொள்ளையர்கள். “























