Description
ப்ரமிள், இடாலோ கால்வினோ ஆகியோரின் மரபு மீறிய எழுத்து முறைகளை இரு கட்டுரைகள் நுணுக்கமாக அறிமுகம் செய்கின்றன. தேவதாசிமுறை குறித்த இரு கட்டுரைகள், இராகவையங்காரின் ‘ஆத்திச்சூடி’, முதலியன இவற்றைப் புதிய கோணங்களில் அணுகுபவை. இராமாயண நிகழ்வுகள் அனைத்தும் விந்திய & சாத்புரா மலைகளைத் தாண்டியதில்லை, லங்கா என்பது இலங்கை அல்ல எனும் பரமேசுவர அய்யரின் கட்டுரை ஆதாரபூர்வமாக அறிவியல் அடிப்படையில் இதை நிறுவுகிறது. கி.ராவின் பாலியல் கதைகளை பக்தின் முதலானோரின் கோட்பாடுகளின் ஊடாக மிக விரிவாக ஆய்வு செய்கிறது ஒரு கட்டுரை. இப்படி வழமையான பார்வைகளை மிக நுணுக்கமாக விமர்சித்துப் புதிய கோணங்களில் அணுகும் 16 முக்கிய கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது.
Reviews
There are no reviews yet.