Description
ப்ரீத்தியுடன் கூட வருகிறது வீடு. அவளை தூக்கிக் கொண்டு பறக்கிறது வீடு. அசையும் நினைவு ஆவியில் இஷ்டத்துக்கு வடிவம் மாறுகிறது வீடு. வானத்தில் பறக்கிறது வீடு. புத்தகத்தில் படித்த செயற்கைக் கோளாக வீடு. பறந்து போவது சந்தோசமாக இருக்கிறது. மேலே பறப்பது சந்தோசம்தான் எல்லோருக்கும். ஆனால் முடியணுமே. எங்கு போகிறேன் நான் என்று அவளையே கேட்டுக் கொள்கிறாள் ப்ரீத்தி. யாரும் கூட இல்லையே என்று மருகுகிறாள். கூட யார் வந்தால் நன்றாக இருக்கும் என யோசிக்கிறாள்.
Reviews
There are no reviews yet.