Description
“மூலை” நம் சமூகத்தின் அராஜகமான அநீதியான கட்டமைப்பு பற்றி. இப்படி எழுத எப்படி தோன்றியது வத்சலாவுக்கு? இந்த பாரம்பரிய ஏற்றத் தாழ்வு பற்றி எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால் பொட்டில் அறைந்தாற் போல் வத்சலா அதை சொல்கிறார். கணவன் இறக்கிறான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை அந்தப் பெண். ஆனால் பிறகு ஒரு நேரத்தில் அழுகிறாள். அது எப்பொழுது? அந்த நோவை புரிந்தவர்களுக்கு அது எப்படியும் தெரியும். புரியாதவருக்கு வத்சலாவின் கதையைப் படித்த பின் தெரியும்.
Reviews
There are no reviews yet.