Description
மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை,தமிழரின் அரும்பெரும் சாதனைகள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்டவற்றை எளிமை நடையில் தந்திருக்கிறார்.
Prathiba g –
அருமையான வரிகள், பாடல்கள் அனைத்தும் வேறு வேறு தலைப்புகளில் குழைந்தைகள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது சிறப்பு, பயனுள்ள புத்தகம்.
bpadmin –
நன்றி… ஊக்கம் தரும் பதிவு… இதை மற்றவர்களுக்கும் பகிரவும்
ஆதி வள்ளியப்பன் –
‘ஒரெழுத்து ஒரு மொழி’ பாடலில் தமிழின் ஒவ்வோர் எழுத்துக்கும் உள்ள அர்த்தத்தை விளக்கியுள்ளார். ‘ஒரு சொல்லில் இரு பொருள்கள்’ பாடலும் சுவாரசியம். பாடுவதற்குத் தோதான பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தாய், தந்தை, ஆசிரியர், நட்பு, சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து தலா 4 நறுங்குறள்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
– ஆதி வள்ளியப்பன், தமிழ் இந்து நாளிதழ்