Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹150.00
ஒரு சராசரி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த நான் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளேன் என்பதை இந்த பத்திகள் எனக்கு துலாம்பரமாக்குகின்றன. எனது வாழ்நாள் பூராகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவுகளுக்காகவும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டுள்ளேன். பயிர் வளர்ப்பதிலும் கால்நடைகளைப் போஷிப்பதிலும் உபதேசம் வழங்குவதிலுமாக பொழுதுகளைக் கழித்துள்ளேன்.
13 people are viewing this product right now
ஒரு நாற்பதாண்டு காலம் வேளாண்மை செய்திருக்கிறேன். அதில் இலாபம் என்பதை விட நஷ்டந்தான் அதிகம் சந்தித்திருக்கிறேன். அதற்கான உடலுழைப்பு ஏராளம். அரசியல் காரணங்களுக்காக இந்தத் தீவு பூராகவும் அலைந்திருக்கிறேன். சந்தோஷமாக அந்த இடமாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். புதுப்புது ஊர்களையும் புது மனிதர்களையும் காண்பதில் அடங்காத ஆசை கொண்டிருக்கிறேன்.
வாசிப்பதை ஒரு தவமாகவே கொண்டிருக்கிறேன். இலௌகீக வாழ்தலுக்கான தேடலில் இலக்கியத்தை ஊழியமாகக் கொள்ள முடியவில்லை என்னளவில் அதுவொரு பொழுதுபோக்கு. எழுத்து என்பது ஒரு வரம் என்றால் வாசிப்பு தவம் என்று சொல்வேன்.
-எஸ்.எல்.எம். ஹனீபா
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹1,140.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.