Description
டரோ யஷிமா என்று புனைப் பெயர் கொண்ட இவாமஸ்டு அசுசி 1908 ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். கலைக் கல்லூரியில் பயின்றவர். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். இவர் எழுதிய சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்கள் ‘காக்கைச் சிறுவன்’, ‘குடை’, ‘கடற்கரை கதை’ போன்றவை அமெரிக்காவின் பிரபலமான ‘கல்டிகோர்ட் விருது’ பெற்றவை. சிபி என்ற மலை கிராமத்துச் சிறுவன் நகரத்துப் பள்ளியில் சேர்ந்தான். வகுப்பறை மாணவர்களும் ஆசிரியரும் வியக்கும் வகையில் பறவை மொழி பற்றி தெரிந்திருந்தான். இயற்கையை நேசித்தான். புழு பூச்சிகளிடம் பேசினான். காடு, மரங்கள், பூக்கள் என ஓவியங்களை வரைந்து திறமையை வெளிக்காட்டினான். அனைவரது பாராட்டுதல்களைப் பெற்றான். வாருங்கள் குழந்தைகளே, சிபியைச் சந்திப்போம்.









Reviews
There are no reviews yet.