Description
திகைத்து நின்றவள் சட்டென அமர்ந்து கடலையே பெரியதோர் விளையாட்டுப் பொருளாய் கையில் வைத்து விளையாடத் தொடங்குகிறாள். நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது. இருட்டத் தொடங்கி விட்டது. வீட்டிற்குப் போகலாமென அன்னை அழைக்கிறார். இன்னும் விளையாடித் தீராத புத்தம் புது பொம்மையாய் தன் முன்னால் கிடக்கும் கடலைப் பார்த்துவிட்டு குழந்தை சொல்கிறாள்..
“கொஞ்சம் இருங்கம்மா! அலை குறைஞ்சொன்னே வந்துடறேன்”
Reviews
There are no reviews yet.