Availability: In Stock
Author:

மாயாவியின் திமிர்

2
SKU: 28142-1

Original price was: ₹140.00.Current price is: ₹126.00.

In stock

குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது.

Description

ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். அதே சாயலில் உள்ள ஒரு கதையே ‘ஒத்தைமுடிக்காரி’. உதவும் குணத்தால் வழியில் சந்திக்கும் விலங்கு, பறவை, மனிதர்களின் அன்பைப் பெறுகிறாள்.

படிக்கும் குழந்தைகளின் உள்ளத்தில் நற்பண்பால் ஏற்படும் நன்மையை விதைத்துச் செல்வாள்.
புத்தகத்தின் தலைப்பாக இருக்கும் ‘மாயாவியின் திமிர்’ என்ற கதை, வண்ணங்கள் நிறைந்த, அழகான , பெரிய ஒரு பட்டாம்பூச்சியைப் பற்றியது. அழகும் கர்வமும் அந்தப் பட்டாம்பூச்சியை என்ன பாடுபடுத்துகிறது என்பதே இக்கதையின் மைய இழை. பூச்சிகளை உண்டு வாழும் நெப்பந்தஸ் என்னும் பூவைப் பற்றிய தகவலையும் இக்கதை கூறுகிறது. இவ்வாறு சில அறிவியல் செய்திகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்ல தவறவில்லை ஆசிரியர் மோ.கணேசன்.

2 reviews for மாயாவியின் திமிர்

  1. முகிலை ராசபாண்டியன்

    சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட தொகுப்பு நுால். விலங்கு கதாபாத்திரங்களுடன் இணைந்த கதைகளும், அறிவியல் புனைகதையும் அடங்கியுள்ளன. ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற கதை முழுதும் விலங்குகள் தொடர்பானது. புறா, கிளி, சிட்டுக்குருவி, சிலந்தி, பாம்பு என்ற பாத்திரங்களை நேரடியாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

    ஆந்தை, வவ்வால் போன்றவற்றை கதைப்போக்கில் சொல்லப்பட்டுள்ளது. புறாவும், கிளியும், சிட்டுக்குருவியும், பாம்பால் அடையும் துன்பத்திற்கு, சிலந்தி தீர்வு உருவாக்கித் தருவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. உற்சாகம் தரும் இந்த கதைகளை சிறுவர், சிறுமியர் விரும்பிப் படிப்பர். நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கும்.

    – முகிலை ராசபாண்டியன்

  2. முகிலை ராசாபாண்டியன்

    சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட தொகுப்பு நுால். விலங்கு கதாபாத்திரங்களுடன் இணைந்த கதைகளும், அறிவியல் புனைகதையும் அடங்கியுள்ளன. ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற கதை முழுதும் விலங்குகள் தொடர்பானது. புறா, கிளி, சிட்டுக்குருவி, சிலந்தி, பாம்பு என்ற பாத்திரங்களை நேரடியாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

    ஆந்தை, வவ்வால் போன்றவற்றை கதைப்போக்கில் சொல்லப்பட்டுள்ளது. புறாவும், கிளியும், சிட்டுக்குருவியும், பாம்பால் அடையும் துன்பத்திற்கு, சிலந்தி தீர்வு உருவாக்கித் தருவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. உற்சாகம் தரும் இந்த கதைகளை சிறுவர், சிறுமியர் விரும்பிப் படிப்பர். நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கும்.

    https://books.dinamalar.com/details.asp?id=26893

Add a review

Your email address will not be published. Required fields are marked *