Description
கிளிகளும் குருவிகளும் தக்காளியும் பூனையும் சேவலும் நாயும் மாம்பழமும் காக்காயும் சிறார் உலகில் சகஜமாக நடமாடுவதை ஓசை நயத்துடனும் எளிய கவித்துவமான சொற்களுடனும் பாவண்ணன் பாடலாக எழுதியிருக்கிறார். “காக்கா கூட்டமே காக்கா கூட்டமே கிட்ட வராதீங்க காய வச்ச நெல்லு மேலே வாய வைக்காதீங்க’ என்று சிறுவன் காகங்களை விரட்டும் பாடல் வரிகள் சித்திரமாக விரிகிறது. அதேநேரம் கா கா என்பது காக்கையின் வணக்கம் என்று தனது புதிய கவித்துவமான வரிகளை அவர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். ரயிலில் தான் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை எழுதிய ஆசிரியர் சிறார்களின் மனஉலகை வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு காட்சிகளின் வழியாக, வெவ்வேறு பாத்திரங்களின் வழியாக அழகுறச்சொல்கிறார். அன்றாட வாழ்வியலில் அவர்கள் சந்திக்கும் பொருட்களைக் கொண்டு பாடல்களை இயற்றியிருப்பது இதன் சிறப்பு. தக்காளிப்பாடல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. “கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு கால் முளைத்ததாம் கூடத்திலிருந்து வாசலுக்கு துள்ளிக் குதித்ததாம்’ என்ற வரிகள் சிறார்களை மட்டுமல்லாது புத்தகம் வாசிக்கும் அனைவரையும் மலர்ச்சி கொள்ளச் செய்யும். பாவண்ணன் சமகால நவீன இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளி. பல விருதுகள் பெற்றுள்ளார். இது இவருடைய குழந்தைகளுக்கான புதிய பாடல் புத்தகம்.
Reviews
There are no reviews yet.