Description
இந்திய மக்களின் வறுமை என்பது அரசாங்க அறிக்கைகள், மைய நீரோட்ட பொருளாதார நிபுணர்களின் பங்குச் சந்தை ஆய்வு நேரம் போக மீதமிருக்கும் பொழுதில் எழுதும் கருத்துத்தாள்கள் ஆகியவற்றில் வரும் வறண்ட புள்ளி விவரங்கள்தாம். ஆனால், சாய்நாத்தின் எழுத்துகளில் வறுமை உயிர்பெற்று நம் கழுத்தைப் பிடிக்கின்றது. அவரது பிரத்யேகமான மொழிநடையும், மென்நகை உணர்வும், எள்ளலும் இதனைச் சாதிக்கின்றன. இருண்ட யதார்த்தமும், அதன் ஊடே மினுங்கும் நம்பிக்கை கீற்றுகளும் வரிகளுக்கு இடையே எல்லாம் நிரம்பி வழியும் எழுத்து அவருடையது.
Reviews
There are no reviews yet.