Description
ஆயுதம் தாங்காமல், ஆட்சியைக் கைப்பற்றாமல், பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காமல், காவலர்கள் மீதோ, கொள்கை எதிரிகள் மீதோ தாக்குதல் தொடுக்காமல் சிறைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், உடல் உபாதைகளுக்காக ஓய்வு எடுக்காமல், தாமும் தமது தொண்டர்களும் அடிபட்டு, சிறப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்த வரலாறு பெரியார் என்னும் மகத்தான தலைவரின் வரலாறு. பெரியாரின் அறிவும் அறிவு நாணயமும் சமூகநேயமும் துணிவும் ஓய்வறியாத உழைப்பும் போர்க்குணமும் போர்வியூகமும் எண்ணற்ற பாடங்களை நமக்கு விட்டுச்சென்றுள்ளன.
Reviews
There are no reviews yet.