Description
துயரமான தருணங்களில்தான் நகைச்சுவை உணர்வு நம் மக்களிடம் மிகுந்து வரும் என்பது ஓர் நகைமுரண். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவன் சொன்னது மக்களிடமிருந்து அப்படைப்பாளி கற்றுக்கொண்ட வாசகம்தான். ‘தட்டிப்போட்ட ரொட்டி பொரட்டிப்போட நாதியில்லே’ என்று நம் கிராமத்துக் கிழவி சொல்லும் சொலவடையும், ‘சாமியே சைக்கிள்ள போகுது பூசாரி புல்லட் கேட்கலாமா’ என்பதும் துன்பத்துக்கு நடுவிலும் கைத்த புன்னகையுடன் நம் மக்கள் படைத்த இலக்கியங்கள்தான். இம்மரபின் தொடர்ச்சிதான் டாக்டர் ராமானுஜத்தின் நகையுணர்வு மிளிரும் எழுத்துக்கள்.
Reviews
There are no reviews yet.