Description
நான் மலேசியாவில் இருந்த அந்த நாட்களில், என்னுடைய வாழ்க்கையைக் குறித்து என்னிடமே ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன். இளமையில் பாலியல்
தொழிலில் ஈடுபட்டு, முதுமையில் அநாதைகளாகத் தெருவில் கிடக்கும் திருநங்கைகளை மலேசியாவில் பார்த்தேன் மனநோயாளியைப் போன்று வாழ்ந்துகொண்டிருக்கும் ஷீலாப் பாட்டியை அய்ரோப் பாவில் பார்த்தேன் எந்தவித அடிப்படை உரிமைகளுமற்று இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் திருநங்கைகளும், யாழ்ப்பாணத்தில் மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் திருநங்கைகளும் எனக்கொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நான் ஈழத்தில் முளைத்திருந்தாலும் ஊன்றப்பட்டு வளர்ந்து நிற்கும் நிலம் ஜெர்மனி. நான் பலன் தருவதா அல்லது படுவதா என்பது என் கையிலேயேயுள்ளது. நீண்ட வேரில்லாவிட்டால்
வீழ்ந்து போவேன்.
Reviews
There are no reviews yet.