Description
வானொலியில் கேட்க நேர்ந்த ஒரு நேர்காணலில் ’உயிர் தரும் மரம்’ என்ற ஒரு நூலைப் பற்றி ஒரு நாள் முழுக்க உலக நாடுகள் பலவற்றில் இருந்து பலரும் தமது வாசக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதைக் கேட்கிறான். ‘‘புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும்…” என்று தொகுப்பாளினி பேசும் வார்த்தைகள், அக்கானின் மனதில் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. ‘‘யாராவது எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திற்கு இந்தப் புத்தகத்தை அனுப்புவீர்களா?” என்று வானொலிப் பெட்டியிடம் கத்திக் கேட்கிறான். அது பேசாது எனத் தெரிந்ததும் மவுனமாகிறான். அப்பாவின் தொழில், சட்ட விரோதமானது; அது, குற்றம் எனத் தெரிந்து அதைத் தடுக்க வகையறியாமல் வேதனையுடன் கண்ணீர் விடும் அக்கானுக்கு நம்மில் யாராகிலும் ‘உயிர் தரும் மரம்’ நூலை அனுப்பி வைக்க முடியுமா?
Reviews
There are no reviews yet.