Description
இரண்டு வகைகளுக்கும் பொதுவான அம்சம், மனித மனத்தின் நுண் அசைவுகளை அவை பதிவுகொள்ளும் விதம். நடப்பியல் கதைகளில், பால்ய காலம் குறித்து எழும் சித்திரங்கள் காட்சி பூர்வமானவை. கூர்ந்த வாசிப்புக்கு மட்டுமே அகப்படக் கூடிய அபாரமான நுட்பங்கள் கொண்டவை. குறிப்பாக, அலையறியாதது கதையில், சிறுமியின் தாயார் நியாயம் கேட்க வரும்போது, ‘ஆனா…’ என்ற ஒரே சொல்லில் பொதிந்திருக்கும் ஆழமும் பயங்கரமும் அலாதியானவை. இந்த ஒரு கதை, தன்னுள் புதைத்து வைத்திருக்கும் மர்மம் காரணமாக, இரண்டு வகையிலும் பொருந்தக்கூடியது.









Reviews
There are no reviews yet.